<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிராவில் படிப்பதற்கு கடன் பெறுவது பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. </p> <h3 style="text-align: justify;">கல்விக் கடன் தொகை அளவு</h3> <p style="text-align: justify;">இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.</p> <p style="text-align: justify;">வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.</p> <h3 style="text-align: justify;">செலுத்த வேண்டிய முன்தொகை</h3> <p style="text-align: justify;">நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை</p> <p style="text-align: justify;">நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்</p> <h3 style="text-align: justify;">கடனை திருப்பி செலுத்தும் முறை</h3> <p style="text-align: justify;">வேலை கிடைத்த பிறகு அல்லது படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">உத்தரவாதம்</h3> <p style="text-align: justify;"><strong>நான்கு லட்சம் ரூபாய் வரை</strong></p> <p style="text-align: justify;">சொத்து பிணை தேவையில்லை.</p> <p style="text-align: justify;"><strong>நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை</strong></p> <p style="text-align: justify;">மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.</p> </div>