<p style="text-align: justify;">ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கிறுத்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவ மாணவிகள் ஆகியோர் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">ஊக்கத் தொகை</h3> <p style="text-align: justify;">ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கிறுத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.</p> <h3 style="text-align: justify;">தகுதிகள்</h3> <p style="text-align: justify;">பத்தாம் வகுப்பிற்கு பிறகு படிப்பை தொடரும் பட்சத்தில், இந்த மாணவ மாணவிகளுக்கு முதல் ஆண்டுக்கு ரூ. 800 மற்றும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஓராண்டிற்கு ரூ. 960 வீதமும் வழங்கப்பட்டு வருகிறது. வருமான வரம்பு ஏதுவும் இல்லை.</p> <h3 style="text-align: justify;">எப்படி பெறுவது?</h3> <p style="text-align: justify;">இந்த மாணவ மாணவிகள் அவர்கள் பள்ளிகளின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="https://www.tn.gov.in/ta/scheme/data_view/83093" target="_blank" rel="noopener">தமிழ்நாடு அரசு</a></p>