<p style="text-align: justify;">முன்பருவ கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">முன்பருவ கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள்</h3> <p style="text-align: justify;">குழந்தை நலத் திட்டங்கள் பிறந்தது முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் காப்பகமாகவும், மூன்று வயது முதல் ஐந்து வரையுள்ள குழந்தைகளுக்கு பால்வாடியாகவும், 6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு முறை சாரா கல்வி வகுப்புகளாகவும் செயல்படுகிறது. கலை நயத்தோடும், ஆக்கபூர்வமாகவும், விளையாட்டு முறையிலும், மேலும் கல்வித் தொடர்பான இடங்களுக்கு செல்லுதல் மூலம் கல்வி கற்றல் செயல்படுகிறது.</p> <ul style="text-align: justify;"> <li>குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பின்னும் தேவையான கவனிப்பு முறைகளைத் தாய்க்கு அளித்தல்.</li> <li>சத்துணவு - பால், மதிய உணவு, ஊட்டக்குறைவான குழந்தைகளுக்குச் சிறப்பான உணவுகள் வழங்குதல்,</li> <li>மருத்துவரின் அறிவுரைப்படி பாலூட்டும் தாய்க்கு பால் வழங்குதல். கல்வி பயணம் செல்லுதல்,</li> <li>விழாக்கள் கொண்டாடுதல்,</li> <li>விளையாட்டு போன்ற செயல்களின் மூலம் குழந்தைகளுக்கு போதுமான பொழுதுபோக்கு வசதிகளை அளித்தல்.</li> <li>முறையான கல்வி முறைக்குக் குழந்தைகளை ஒருங்கிணைத்துத் தயார் செய்து மனநிறைவோடு எதிர்கொள்ளவும், அல்லது தொழிற்கல்வியில் பயிற்சியளிக்கவும் உதவுதல்.</li> <li>சமுதாய நலத் திட்டங்களாக ஒரே எண்ணமுடைய பெற்றோர்களை இணைத்து குழந்தை நலன், சுகாதாரம், சத்துணவு போன்றவற்றில் பயிற்சி பெறச் செய்தல்.</li> <li>விலை குறைவான கல்விசாதனங்களை தயாரிக்க ஆக்கபூர்வமானகூடங்களை அமைத்துக் கொடுத்தல்</li> </ul> <p style="text-align: justify;">போன்ற செயல்கள் மூலம் குழந்தைகளின் முன்பருவ கல்வியை குழந்கைளுக்கு கற்பிக்கலாம்.</p> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் :</strong><strong> </strong>தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை</p>