இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்தும் இன்றியமையாதது. நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியம். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் தேசத்தை முன்னேற்றத்தை நோக்கி இயக்க இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான கல்வி உள்கட்டமைப்பை உருவாக்க இந்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. கல்வி மூலம் இந்தியாவை மாற்றுதல் பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் அரசியலமைப்பு விதிகள் மூலம் கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துள்ளது. அரசியலமைப்பின் 86வது திருத்தத்தின் 21-ஏ பிரிவு மூலம் இலவச ஆரம்பக் கல்வியின் அறிமுகம், ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக உறுதி செய்கிறது. ஏப்ரல் 1, 2010 முதல் நடைமுறைக்கு வந்த கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டம், 2009, பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் முறையான பள்ளியில் தரமான தொடக்கக் கல்வியை ஒவ்வொரு குழந்தையும் பெறுவதை ஆதரிக்கிறது. அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளால் ஆதரிக்கப்படும் இந்த சட்ட கட்டமைப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான கல்வி முறையை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. கல்வியானது தடைகளை உடைத்து, வாய்ப்பின் கதவுகளைத் திறந்து, சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கு தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவான சீர்திருத்தங்கள் மூலம் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கி, இந்தியாவின் கல்வி சூழல் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. அனைவருக்கும் பிரகாசமான, மேலும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான அடித்தளமாக கல்விக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்