<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">இந்த சட்டம் எதைப் பற்றியது?</h3> <p style="text-align: justify;">ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான ஒவ்வொரு குழந்தையும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை பெற்றுள்ளது. அரசியல் அமைப்புச் சட்ட 86ஆவது பிரிவில் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவு 21ஏ சட்டத் திருத்தத்தின்படி, கல்வி உரிமை மசோதா இந்தச் சட்டப் பிரிவு சட்டத்திற்கு வலுசேர்க்கிறது,</p> <p style="text-align: justify;">அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கும். இந்தப் பள்ளிகள் அரசு நிர்வாகக் குழுக்களால், நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளையாவது அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;">தொடக்கக் கல்விக்கான எல்லாவிதமான அம்சங்களையும் தரத்தையும் கண்காணிப்பதற்காக தொடக்கக்கல்விக்கான தேசிய கமிஷன் ஒன்று அமைக்கப்படும்</p> <h3>இந்த சட்டம் ஏன் இன்றியமையாதது?</h3> <ul> <li style="text-align: justify;">அரசியல் அமைப்புச் சட்டத்திருத்த அமலாக்கத்தை உறுதிபடுத்துதற்கான திசையில் அரசின் முதல் நடவடிக்கை என்ற கோணத்தில் இந்த சட்ட மசோதா முக்கித்துவம் வாய்ந்தது.</li> <li style="text-align: justify;">இலவச கட்டாய தொடக்க மற்றும் மேல்நிலை கல்வி வழங்குவதற்கான சட்டம்</li> <li style="text-align: justify;">எல்லா இடங்களிலும் பள்ளிக்கூடம் ஏற்படுத்தவது</li> <li style="text-align: justify;">பள்ளி கண்காணிப்பு குழு அமைப்பது _ முறையாக இயங்குவதைக் கண்காணிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்</li> <li style="text-align: justify;">6-14 வயது வரையிலான குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது என்பதை கண்காணிக்கிறது</li> <li style="text-align: justify;">இவை அனைத்தும் முறைசார்ந்த பொதுகல்வித்திட்டத்தை மேம்படுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் உருவாவதை தடுப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகளை வழங்குகிறது.</li> </ul> <p style="text-align: justify;"><strong>இந்த சட்டத்தில் 6 முதல் 14 வரையிலான வயது தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?</strong></p> <p style="text-align: justify;">அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பப் பள்ளி கல்வி முதல் மேல்நிலைப் பள்ளி கல்வி வரை கட்டாயக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, இந்த வயதில் வழங்கப்படும் கல்வி அவர்களுடைய எதிர்காலத்திற்காக போடப்படும் அஸ்திவாரமாக அமையும் என்ற கருத்தைக் கொண்டு உருவானது.</p> <p style="text-align: justify;"><strong>இந்த சட்டத்தின் முக்கியத்துவம் என்ன மற்றும் இதனால் நம் நாட்டுக்கு என்ன பயன்?</strong></p> <p style="text-align: justify;">குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க கணமாகும்.</p> <p style="text-align: justify;">குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.</p> <p style="text-align: justify;">உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p> <h3>இலவச கட்டாய ஆரம்பக் கல்வி என்றால் என்ன?</h3> <ul> <li style="text-align: justify;">6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை பெறுகிறார்கள்.</li> <li style="text-align: justify;">ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாட புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>கல்விக்கான உரிமை நிலைநாட்டப்படுவதில், பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் பங்கு என்ன?</strong></p> <ul> <li style="text-align: justify;">குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க கணமாகும். இந்தியாவில் முதல் முறையாக, குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், குழந்தைகள் தங்கள் உரிமையான ஆரம்பக் கல்வி பெறுவதற்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது.</li> <li style="text-align: justify;">உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே, குழந்தைகளின் முழுத் திறனும் வெளிப்படும் வகையில், குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்புக் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</li> <li style="text-align: justify;">இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையான 8 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவை தவிர்த்து விட்டு, 2017- க்குள் அனைத்து குழந்தைகளும் ஆரம்பக் கல்வி முடிக்கும் இலக்கை உலகால் அடைய முடியாது.</li> <li style="text-align: justify;">ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழுவில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.பள்ளி நிர்வாகக் குழு, பள்ளிக்கான மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது, அரசு நிதியை முறையாகப் பயன்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த பள்ளியின் சூழலைக் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்யும். பள்ளி நிர்வாகக் குழுக்களில் 50 சதவீதம் பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்கி உள்ளது. சிறுவர் மற்றும் சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகளை ஏற்படுத்துவது, உடல் நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து கல்வியை முழுமை பெற வைப்பது ஆகியவற்றில் இவ்வாறான சமுதாய பங்கேற்பு பெரிதும் உதவும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>கல்விக்கான உரிமைச் சட்டத்தால் எவ்வாறு குழந்தைகள் விரும்பும் பள்ளிகளை உருவாக்க முடியும்?</strong></p> <ul> <li style="text-align: justify;">நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளிகளும் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில், ஒவ்வொரு 60 குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சி பெற்ற இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.</li> <li style="text-align: justify;">குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது, பாடத்திட்டத்தை முழுமை செய்வது, குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறனை மதிப்பிடுவது, தவறாமல் பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். வகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல், மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்கும்.</li> <li style="text-align: justify;">குழந்தைகள் சிறப்பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரியர்களுக்கு தேவையான உறுதுணையை அரசு நிறைவேற்றும். பள்ளி நிர்வாகக் குழுவுடன் இணைந்து, பள்ளியின் தரத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதில் சமுதாயமும், பெற்றோரும் முக்கிய பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமைக் கனவை நனவாக்குவதற்கு தேவையான அனைத்து சட்ட வடிவங்களையும், ஏதுவான சூழ்நிலைகளையும் அரசு உருவாக்கும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>இந்தியாவில், எவ்வாறு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கான நிதியைப் பெறுவது?</strong></p> <ul> <li style="text-align: justify;">குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு இச்சட்டம் ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.</li> <li style="text-align: justify;">உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</li> <li style="text-align: justify;">இதற்கு தேவைப்படும் நிதியை, மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். மத்திய அரசு, தேவைப்படும் நிதியை கணக்கிடும்: மாநில அரசுகளுக்கு, இதிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் நிதியாக வழங்கப்படும்</li> <li style="text-align: justify;">கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு வழங்குவதை பரிசீலிக்கும்படி, மத்திய அரசு, மத்திய நிதிக் குழுவை (Finance Commission) கேட்டுக் கொள்ளலாம்.</li> <li style="text-align: justify;">சட்டத்தை நடைமுறைபடுத்த தேவைப்படும் மிகுதி நிதிக்கு மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். சமுதாய அமைப்புகள், மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் நிதிப்பற்றாக்குறையை போக்க முடியும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>கல்வி உரிமையை அடைவதில் உள்ள தடைகள் யாவை?</strong></p> <ul> <li style="text-align: justify;">ஏப்ரல் 1 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. வரைவு விதிகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மாநிலங்கள் தங்களுடைய விதிகளை வடிவமைத்து, கூடிய விரைவில் அவற்றை வெளியிட வேண்டும்.</li> <li style="text-align: justify;">குழந்தைத் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்த குழந்தைகள், அதிக கவனம் தேவைப்படும் குழந்தைகள், அல்லது சமுதாயம், கலாச்சாரம், பொருளாதாரம், மொழி, வசிப்பிடம், பாலினம் போன்ற பிற அடிப்படைகளில் ஒதுக்கப்பட்ட மக்களை சென்றடையும் வகையில் சிறப்பு வழிமுறைகள் இச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டம், கற்பித்தல் மற்றும் கற்றலில் அதிக தரத்தை அடைய முயற்சிப்பதால், இதற்கு கூடுதல் முயற்சிகளும் தகுந்த சீரமைப்புகளும் தேவைப்படுகின்றன</li> <li style="text-align: justify;">குழந்தைகள் விரும்பும் வகையிலான கல்வி கற்பிக்க தேவைப்படும் 1 மில்லியனுக்கு மேற்பட்ட புதிய மற்றும் ஏற்கனவே பணியிலுள்ள ஆசிரியர்களை அடுத்த 5 ஆண்டுகளில் பயிற்றுவிக்க, புதிய வகை அணுகுமுறைகள் மற்றும் முயற்சிகள் தேவை.</li> <li style="text-align: justify;">இன்றைய தேதியில் பள்ளியில் கற்க வேண்டிய 190 மில்லியன் குழந்தைகளில் ஒவ்வொருவருக்கும், அவர்கள் விரும்பும் வகையில் ஆரம்பக்கல்வி பெறுவதை உறுதி செய்ய, அவர்தம் குடும்பத்தினரும் சமுதாயமும், பெரிய அளவிலான பங்களிப்பைத் தரவேண்டும்.</li> <li style="text-align: justify;">சீரிய தரத்தையும், சமத்துவத்தையும் அடைய, தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும். முன்பள்ளிக்கல்வியில் முதலீடு செய்வது குறிக்கோள்களை அடையக் உதவக்கூடிய சிறந்த அணுகுமுறையாகும்.</li> <li style="text-align: justify;">பள்ளிக்குச் செல்லாத 8 மில்லியன் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பது, அவர்களை பள்ளியில் இருத்துவது மற்றும் அவர்களை வெற்றியடையச் செய்வது போன்ற கடுமையான சவால்களை சமாளிக்க, இலகுத்தன்மை உடைய மற்றும் புதுமையான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.</li> </ul> <p style="text-align: justify;"><strong>கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?</strong></p> <ul> <li style="text-align: justify;">இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.</li> <li style="text-align: justify;">ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷனகள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்களை (Right to Education Protection Authority – REPA), ஏப்ரல் 1 முதல் ஆறு மாதங்களுக்குள் அமைக்க வேண்டும். குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக்கலாம்.</li> <li style="text-align: justify;">குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும். அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>கல்வி உரிமைச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்? அது எவ்வாறு நனவாகும்?</strong></p> <p style="text-align: justify;">சீரிய தரத்தையும் சமத்துவத்தையும் அடைய மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க, பெரிய அளவிலான முயற்சிகள் செய்வது முக்கியமாகும். அரசுகள், சமூக அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பிரபல புள்ளிகள் ஆகிய முக்கிய பங்குதாரர்களை ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு ஒன்றுபடுத்தும்.தேவையான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், பணிக்கான அழைப்பு விடுக்கவும், யூனிசெப் இப்பங்குதாரர்களை ஒருங்கிணைக்கும். சட்ட வடிவமைப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம், குழந்தைகளுக்குத் தேவையான முடிவுகளை எட்டுவதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தும். கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை கண்காணிக்கத் தேவையான மாநில மற்றும் மத்திய அளவிலான அமைப்புகளை வலுப்படுத்தவும் யூனிசெப் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும்.</p> </div>