<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்பதாரர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு குறை தீர்க்கும் மையம் 01.02.2012 அன்று தொடங்கப்பட்டது. அதன் பணிகள் பின்வருமாறு:</p> <h3>தொலைபேசி வாயிலாக</h3> <p style="text-align: justify;">பொதுத் தொலைபேசி வாயிலாக விண்ணப்பதாரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் தொடர்பு கொண்டு உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படுகிறது. (இலவச அழைப்பு எண்: 1800 425 1002)</p> <h3 style="text-align: justify;">நேரடியாக</h3> <p style="text-align: justify;">குறை தீர்க்கும் மையத்திற்கு நேரடியாக வரும் விண்ணப்பதாரர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்குண்டான படிவங்களைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அன்றைய தினமே பதில் அளிக்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">அஞ்சல் வாயிலாக</h3> <p style="text-align: justify;">அஞ்சல் மூலமாக வரும் விண்ணப்பதாரர்களின் கடிதங்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு. மூன்று தினங்களுக்குள் பதிலை மேற்படி பிரிவுகள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு அதன் நகலை குறை தீர்க்கும் மையத்திற்கு வழங்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">மின்னஞ்சல் வாயிலாக</h3> <p style="text-align: justify;">மின்னஞ்சல் வாயிலாக வரும் கேள்விகளை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு பதில் பெறப்பட்டு அன்றைய தினமே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு பதில் அளிக்கப்படுகிறது. (Email: contacttnpsc@gmail.com)</p> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்</p> </div>